Friday, May 3, 2013

மே தினம்........ இன்று விடுமுறை தினம்........


சமதர்ம  சமத்துவ சமுதாயம் படைப்பேன்னு சொன்னீங்களே தோழரே....!

பொன்னுலகம்னு சொன்னானே.....பொன்னுலகம்னு சொன்னானே.....ன்னு.... அருணாசலத்தின் குரல் தான்

காதில் ஒலித்ததுக் கொண்டிருந்தது.....

ஜெயமோகன் எழுதிய  பின்தொடரும் நிழலின் குரல் நூலின் முக்கிய கதாபாத்திரமான  அருணாசலத்தின் குரல் அது.


மின்சாரம் இல்லாமல்  40 டிகிரி வெய்யிலின் வெக்கையில் , தூங்காமல் தூங்கி விழித்தெழுந்து...

சுவைத்த அன்னபூர்ணா காபியின் சுவையுடன் கோவை நகரை வலமிருந்து இடம் வந்தேன்.



முப்பத்தி ஆறு செங்கொடிகள் கொண்ட தோரணம்.., இருபத்தி நான்கு இருக்கைகளில் ..

செங்கொடி சட்டையில் குத்திக்கொண்டு மூன்றே மூன்று பேர் ., கொடி ஏற்ற வரப் போகும் உள்ளுர் 

சங்கத்தலைவருக்காக  காத்திருக்க.....

கண்ணாடி ஏற்றப்பட்டு .., குளிரூட்டப்பட்ட  ஆடி7..,டஸ்ட்டர்.,டொயொட்டா.,ஹோ
ண்டா .,

போர்டு.,மிட்சுபிஸி..,ரொணால்டு போன்ற கார்களுடன் .,நம்மூர் டாட்டா., மாருதிகளும் பறக்கின்றன

ஊட்டிக்கும்.,கொடைக்கானலுக்கும்

...... கிடைத்த ஒரு நாள் விடுமுறையைக் கொண்டாட......

மிச்சமுள்ள செங்கொடித்தோழர்களோ....குடும்
பத்துடன் கறிச் சோறு சாப்பிட்டு குதூகலித்திருந்தனர்.



அடர்த்தி  குறைந்து போன  செங்கொடிக்கூட்டம்.., உழைக்கத்தயங்கும்   தொழிலாளர்  வர்க்கம்.,  எல்லோரும்

தலைவர்களே எனும் உணர்வு., தனியுடமைக் கொள்கையின் மீது படியும்  ஆழ்ந்த பார்வை., ஊரிமைக்காக .,

கோரிக்கை வைக்கும் சங்கச் சடங்குகள்.,சதவீதக்கணக்கில் குறைந்து வரும் அரசியல் எண்ணிக்கைகள்.,........


எப்படி இருந்த கம்யூனிஸம் இப்படி  ஆகிவிட்டது.


எங்கே போகிறது  கம்யூனிஸம் ....?



ஆர் எஸ் புரம் பரியல் கிரவுண்டில் மூன்று மணிக்குத் துவங்கும் ., பல்லாயிரக்கணக்கான செங்கொடித்தோழர்கள்

கலந்து கொள்ளும் ஊர்வலம்   ...... சொல்லிவைத்த நேரத்தில் மிகச் சரியாக மாலை ஆறு மணிக்கு வ.ஊ. சிதம்பரம்

பூங்காமைதானத்தை சென்று அடையும்..!

பிரச்சார இசை நிகழ்ச்சிக்குப்பின் உள்ளூர் தலைவர்களும்  .,வெளியூர் தலைவர்களும் .,

மாநில மத்திய சிறப்புத் தலைவர்களும் உச்சகட்டமாய்  நல்லிரவு வரை முழங்குவார்கள் .


சிவப்புச் சித்தாந்த பிரசுரங்கள் விலை போகும். உறவின் அப்பாற்பட்டு .,தோழர்களுக்குள் தோழமை பெருகும்.......!

நூற்பாலை தொழிலாளர் சங்கமாகட்டும்., பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கமாகட்டும்... தங்களுக்குள் கலந்து

பேசி .,கட்சி உறுப்பினர்கள் மூலமாக தலமைக்கு கொண்டு சென்று...ஒத்துழைத்தோ ., ஒத்துழையாமலோ..,

போராடியோ  தங்களது கோரிக்கைகளுக்கு வலு சேர்த்து ஊரிமைகளை நிலை நாட்டிக்கொள்வதில்

மிகுந்த ஒற்றுமை இருக்கும்.


இன்றோ....அங்கொன்றும் ,இங்கொன்றுமாக  மேதினக் கொண்டாட்டங்கள்.

இவற்றுக்கு  நடுவே ...முத்துக்களைத் தேடித் தேடி .,செம்மைச் சித்தாந்த கடலில் மூழ்கி மூழ்கி........

தோழரே.. தோழரே என்று வாஞ்சையுடன் அழைத்துக் கொண்டு........

முழுநேரத்தொண்டனாக உலா வரும் தோழர்களும் பொருளாதாரத் தேவையின்

பொருட்டு மாற்றத்திற்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்.

  

மே தினம்... உழைப்பவர் வாழ்வின் சீதனம்.....

உத்வேகம் கொடுக்கும் இசையுடன் கூடிய பாடல் வரி....!

சீதனம்.......உழைப்பவர் வாழ்வின்   மூலதனமாகப் போயிற்றா....?


பொது உடமையின் ... பார்வைகள்   தனியுடமையின் மீது படி்ந்து  விட்டதா....?



உங்களுக்கு தெரியுமா.........!

18 ஆம் நூற்றாண்டின் முடிவிலும்., 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும்....இங்கிலாந்து ., ரஷ்யா.,பிரான்ஸ்., அமெரிக்கா.,

ஆஸ்திரேலியா.... போன்ற உலக நாடுகள் எங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் அடக்கு முறைக்கு எதிரான புரட்சிகள் வெடித்தது.


 அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14  அன்று  பாரிஸில்  சோசலிசத்  தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.

18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.  பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட

 இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும்,

 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல்

விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக,

மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.





மே தினம் .....! 1923ம் ஆண்டு முதன் முதலாக சென்னை கடற்கரையில் மே தினம் கொண்டாடி இந்திய வரலாற் றில்

என்றும் அழியாத புகழ் முத்திரையைப் பதித்தவர் பொதுவுடமை வாதியும்.,சீர்திருத்தவாதியுமான மா.சிங்காரவேலர்.






--
Thiagarajan.....