Thursday, December 24, 2009

யாரும் யாருடனும் இல்லை
யாரும் யாருடனும் உண்டு
உன்மையும் மாயையும் ஒன்று
இரண்டுக்கும் நடுவில்
இல்லதது இருப்பதுபோல்
வேதனைகளும் வருத்தங்களும் எதற்கு
....... புன்னகையும்கூட

நானே நானா?

நிலையில்லாப் பார்வை
மோனமும் இல்லை
மெளனமும் இல்லை

நிற்பதும் நடப்பதும்
பார்ப்பதும் உண்பதும்
நானே நானே

ஆனாலும்
நானல்ல அது நானல்ல
புரிந்ததும் புரியாததும்
ஒன்றே

முதல் வணக்கம்

வணக்கம் நண்பர்களே.

புதிய வாசல் திறந்திருக்கிறது இன்று.

என் நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்களை இனி உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் ஊக்கப் படுத்தும்.

நன்றி