இதப் பாருங்க இதழ் இதழா விரிஞ்சு., மரம் பூரா வானம் பார்த்து மலர்ந்து., செக்கசெவேல்ன்னு பூத்துப் புன்னகைக்கும் பருவத்தை மே மாதத்துடன் உறவிட்டு ,மே மாதத்தில் மே ப்ளவர்கள் பூத்து விட்டன என்று காலம் காலமாக சொல்வார்கள்.
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்....என்று தொழிலாளர்த் தோழர்கள் ஒன்றுகூடி செங்கொடி ஏந்தி இரத்தினசபாபதிபுரம் பரியல் மைதானத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய சாலைகளில் பயணித்து, வ.ஊ.சிதம்பரம் பூங்கா திடலில் சங்கமித்து, குதூகலித்து,கூட்டம் நடத்தி ,கோஷ முழக்கம் இட்டு உற்ச்சாகத்துடன் வீடு திரும்புவார்கள்.
மாலை நான்கு மணிக்குப் புறப்படும் எனில்,மணிக்கணக்கில் அவ்வளவு கச்சிதமாக ஊர்வலம் புறப்படும்.
இன்று......!
நகரெங்கும் சாலை விரிவாக்கத்திற்காகவும் ,காங்கிரீட் கட்டிடங்கள் முளைப்பதற்காகவும்.,எண்ணிக்கையி
பஞ்சாலைத்தொழிலின் நசிவும் , பொருள் முதல் வாதத்தின் பிடிப்பும் , நுகர்வோர் கலாச்சாரத்தின் வளர்ச்சியிலும் கட்டுண்டு தொழிலாளர் வர்க்கம் எண்ணிக்கையிலும் , அடர்த்தியிலும் குறைந்து விட்டதை உணர்ந்தேன்.
என் சிறு வயதில் பள்ளி விட்டு வீடு நோக்கி தெப்பக்குள மைதானத்தை கடந்து செல்லும் போது அலறும் செங்கொடிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்வேன். முன் இரவுக் கூட்டத்தில் சிவப்பு ஈரலைத்துண்டுடன் காசுக்கு கையேந்தி வருவதையும் கண்டிருக்கிறேன் .மைதானத்தை சுற்றி இருக்கும் தெருக்களிலெல்லாம் மிதி வண்டிகள் அணி வகுத்திருக்கும்.
சித்தாந்தச் சிற்றிதழ்களை சுற்றி சிவப்புச் சிந்தனையாளர்கள் மொய்த்திருப்பர்.
விடியலில் ஆங்காங்கே சிதறாமல் குவிந்திருக்கும் நிலக்கடலைத் தொல்லிகள் சொல்லும் நேற்றைய இரவின் கூட்டத்தின் அடர்த்தியை....!
சித்தாந்தம் சிதறி விடவில்லை........! சித்தாந்தவாதிகள்..............
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
கானல் நீர்......!
உங்களுக்கு தெரியுமா...........!
மே தினம் .....! 1923ம் ஆண்டு முதன் முதலாக சென்னை கடற்கரையில் மே தினம் கொண்டாடி இந்திய வரலாற் றில் என் றும் அழியாத புகழ் முத்திரையைப் பதித்தவர் பொதுவுடமை வாதியும்.,சீர்திருத்தவாதியுமான மா.சிங்காரவேலர்.


