Thursday, December 19, 2013

இந்திரா பார்த்தசாரதி ......... கோவை வருகை.......

கிருஷ்ணன், கிருஷ்ணனாகப் பிறக்கவில்லை ...... உருவாக்கப்பட்டான்.....................
கிருஷ்ணா.......கிருஷ்ணா.... எனும் தன்னுடைய படைப்பின் மூலம்
மஹாபாரத கிருஷ்ணனை சக மனிதனாகப் படைத்து.., வாழ்வின் பல தருணங்களில் நம்முள் எழுந்த பல கேள்விகளுக்கு பதிலளித்த.......... தமிழ் படைப்புலகின் மிக குறிப்பிடத் தக்க படைப்பாளி................
இந்திரா பார்த்தசாரதி அவர்கள். 

 


1980 களில் கல்லூரியை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்த தருணங்களில்..,

 கனவுகள் கலைந்த போது கண் முன்னே நின்றது வேலை இல்லாத்திண்டாட்டம் தான்.
மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது புத்தகங்கள்.
இருபது வயது வரை தஞ்சைத்தரணியைக் கண்டிராத எனக்கு .,
என் முதல் வாசிப்பில் புழுதி படர்ந்த கிராமத்து மனிதர்களுடன் உறவாடவிட்டு.,கோயில் பிரகாரங்களில் நடக்கவிட்டு ., குளத்தங்கரைகளில் சுவாசிக்கவிட்டு..,காவிரி நதியை கண்களால் பருகவிட்டு.., தூரத்து பச்சைகளையும்., வரப்புகளையும்., வண்டினங்களையும்., பட்சிகளையும் எனக்குள்ளே வண்ணமயமாய் தீட்டி.............,
நான் வாழ்ந்திராத தஞ்சை மண்ணில் பல மாமங்கங்கள் வாழ்ந்த உணர்வை ஊட்டியவர்....தி. ஜானகிராமன் அவர்கள்.

தலை நகர் டெல்லியின் மத்திய தர வாழ்வின் கதவுகளைத் திறந்துவிட்டவர்  ஆதவன் அவர்கள்.
டெல்லிக் குளிரின் வெப்பமூட்டும் அதிகார வர்க்கத்தின் உள் அரங்குகளை மனித மனப்போராட்டங்களுக்கு நடுவே  ”தந்திரபூமி”........
டெல்லி மாநகரின் வெப்பமான வாழ்வின் சூல்நிலைகளை வைத்து பணக்கார ..மேல்தட்டு குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும்  தனக்குள்ளே  தம்மைப்  புதைத்துக்  கொண்டு ., தனித்தனி   "தீவுகளாக” வாழும் வாழ்க்கை........

அரசியல் களத்தில் அன்றும்., இன்றும் ., என்றும்  பொருந்தக்கூடிய அவதாராங்கள் நிறைந்த .,அரசியல்வாதிகளிடமும்., அதிகாரிகளிடமும் சிறைப்படுத்தப் பட்ட “சுதந்தர பூமி”......

தற்கால சூழ்நிலையில்  நிகழ்கின்ற அரசியல் அவலச் சுவையை அன்றே மாறுபட்ட கோணத்தில் பதியப்பட்ட ”சத்திய சோதனை”.......
அரசியல் சதுரங்கத்தில்...வெட்டியும்., வெட்டப்பட்டும் நிலையாமையில் உலன்று ஆடும்...”மாயமான் வேட்டை”......


அரசியல் கலத்திற்கு ஆண்டவனையும் விட்டு விடவில்லை.. ”.தேவர்வருக” என்று திருமாலையே அரசியல் அவதாரம் எடுக்க வைத்திருந்தார்.......

தன் சுயலாபம் ஒன்றே குறிக்கோளாக எக்கால அரசியலிலும் மிகுந்திருக்கும் அரசியல் வியாபாரிகளை ”வேதபுரத்து வியாபாரிகள்” ஆக குறியீட்டு ஓவியமாக தீட்டியிருக்கிறார்.


அரசியல் அங்கதமாகத் தந்த இந்திரா பார்த்தசாரதி அவர்கள்...
தலைநகர் டெல்லியின் வாழ்வியல் பின்புலத்தில்., அரசியல் அதிகார போதையைத் தாண்டி “திரைகளுக்கு அப்பால்” உள்ள  ஆணாதிக்க சமூகத்தையும் அடையாளப்படுத்தியிறுக்கிறார்....


டெல்லி சமூகத்தில் தைரியமும் கோழைத் தனமும் மிகுந்த மனித மனத்தின் தேடலை “ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன” என சொல்லிச் செல்கிறார்.

சாதரன மனிதர்களின் அசாதாரணமான வாழ்வின் சித்திரங்களை
“அக்னி” யாகவும்....

சமூகத்தின் அங்கமாகிய தனிமனித சமூக உறவில் ஏற்படும் சிக்கல்களையும்., காலமதிப்பீடுகளின் போராட்டங்களையும்....“கால வெள்ளமாக”  “ உச்சி வெய்யிலாக” “வேர்ப்பற்றாக”ப்  பதியவைத்துள்ளார்.

குடும்ப அமைப்பில் ஒவ்வொருவறும் தத்தமது தனித்துவ அமைப்பில் மிகுந்த மனப் போராட்டங்களுடன் கூடிய எரியும் நெருப்பில் “வெந்து தணிந்த காடுகளாக” இருப்பதை ஒவியமாகத் தீட்டியிறுக்கிறார்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் இந்த மண்ணில் கலைந்து போன கலாச்சாரம் மீறப் படும் பண்பாடு...... இவற்றுனுள் நீச்சலடிக்கும் மனித மனங்களை “நிலமெனும் நல்லாள்” ஆக காட்டியிருக்கிறார்.
புத்தரும் ஏசுவும் காந்தியும் முயன்று தோற்றுப்போன மாற்ற முடியாத மனித சுபாவத்தை “ஆகாசத் தாமரை” யாக பிரதியெடுத்திருக்கிறார்..
தன் வாழ்நாளில் ஐந்து வருடங்கள் போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைகழகத்தில் பணியில் இருந்த போது வல்லரசு நாடுகளின் பிடியில் சிக்கித் தவித்த போலந்து நாட்டின் தனி மனிதனின் உள்ளுணர்வை..... ”ஏசுவின் தோழர்கள்”ல் நளினமாய்.., நாசூக்காய்., நயமாய் சித்தரித்துக் காட்டியுள்ளார்...

போலந்தாக இருந்தால் என்ன.... புதுப்பேட்டையாக இருந்தால் என்ன? மக்கள்., மக்கள்தான்.... பிரச்னை.,பிரச்னைதான்.........என்று மெல்லப் புன்னகைக்கிறார்..

சமூகம்., தொன்மம்., வரலாறு., தழுவலாக்கம்., ஓரங்க நாடகம்., போன்ற தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்ப்பட்ட நாடகங்களும்.,நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளும், எழுதியிருக்கும் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு........

”ஒளரங்கசீப்., நந்தன் கதை., ராமானுஜர்” போன்ற நாடகங்களும் ”தவம்., மனிதாபிமானம்., ஒரு கப் காப்பி., அவஸ்தைகள்., கன்னி., சொர்க்கத்துக்கு ஒரு குறுக்குவழி.,”  போன்ற சிறுகதைகளும் சிறப்பு பெற்றுதந்தன.......
பத்மஸ்ரீ .சரஸ்வதி சம்மான் , பாரதீய பாஷா பரிஷத், சங்கீத நாடக அகாதெமி விருதுகளை பெற்ற இவருக்கு........... கீழ் வெண்மணி சம்பவத்தை சார்ந்து எழுதிய “குருதிப்புனல்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது........
சமூக மேட்டிமை தளத்தில் அதி தீவிர அறிவாளிகளின் கர்வ மோதல்களின் பின்புலத்தில் மலர்ந்த் இ.பா.வின் நாவல்கள் ஆகட்டும்., தஞ்சை தரணியின் சாதாரண கதை மாந்தர்களின் மன களியாட்டங்களில் மலர்ந்த நாவல்கள் ஆகட்டும் ........
தொலைந்ததைத் தேடுகிறார்கள்.... தேடியதைத் தொலைக்கிறார்கள்.....

இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளில் தனித்துவமாக ஜொலிப்பது

"கிருஷ்ணா கிருஷ்ணா"....

 மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை.  இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான்.

காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான்.

 கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார்.

அந்தக் கனவின் சமகால நீட்சி, கிருஷ்ணா கிருஷ்ணா..........

கிருஷ்ணன், கிருஷ்ணனாகப் பிறக்கவில்லை ...... உருவாக்கப்பட்டான்......................



 ”புது யுகத்தின் புதிய மாறுதல்களின் புற வடிவங்களை விட அக வடிவங்களையும் அதன் ஆழங்களையும் கண்டு தன் எழுத்துக்களில் அபார வெற்றியுடன் கலை உருவாக்கத்தை கொடுக்கிறார் இந்திரா பார்த்தசாரதி......
எதையும் தொழ மறுக்கிற அவருடைய கிண்டலும் தனித்து நிற்கிற போக்கும் அவருடைய வெற்றிக்கு உதவுகின்றன.....”   
                                                                      தி.ஜானகிராமன்
 புது டெல்லி 1971. 



கோவையில்.... இந்திரா பார்த்தசாரதி
2013 க்கான , ஜெயமோகனின் ”விஷ்ணுபுரம்” இல்க்கிய வட்டம் நடத்தும்  இலங்கைத் தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை  பாப்பநாயக்கன் பாளையம் மணிமேல்நிலை பள்ளி வளாகத்தில் நானி கலையரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழவிருக்கும் விழாவில் தலமை உரையாற்ற இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கோவைக்கு வருகை புரிகிறார்......

No comments:

Post a Comment